ச்ச்சீ,. மாணவிகளிடம் இப்படியா பேசியுள்ளார்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

ச்ச்சீ,. மாணவிகளிடம் இப்படியா பேசியுள்ளார்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

 சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் பணியாற்றிய ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஆன்லைன் வகுப்பில் அறைநிர்வாணத்தில் வகுப்பு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற்னர். அந்த விசாரணையில் தான் செய்த பாலியல் அத்துமீறல்களை ஒப்புக்கொண்ட  ராஜகோபாலன் மேற்கொண்டு தெரிவித்த தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. 

அவர் கூறிய தகவல்களின் படி அவரை தவிர வேறு சிலரும் இந்த பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதோடு தான் இதை விளையாட்டாக செய்ததாகவும் அது இவ்வளவு விபரீதமாகும் என்று தெரியவில்லை என்றும் அழுதுள்ளார். அதன்பின் தான் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது எப்படி என்றும் கூறியுள்ளது.

ஆன்லைன் வகுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது குழுக்களில் இருந்து பெண்களின் எண்களை எடுக்கும் ராஜகோபாலன் முதலில் சாதாரணமாக மெசேஜ் அனுப்புவாராம், அதன்பின் அந்த மாணவியின் ஆடை, உடலமைப்பு பற்றி கூறி அதற்கு அந்த பெண்ணின் பதில் எப்படி வருகிறது என பார்த்து அதற்கு ஏற்ப பாலியல் தொடர்பான பேச்சுகளை தொடர்ந்துள்ளார். 

மேலும் இவரது பேச்சுக்கு எந்த மாணவியும் எதிர்ப்பு  தெரிவித்தால் மன்னித்துக்கொள், மாற்றி அனுப்பிவிட்டேன் என்று சொல்லி சமாளித்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். இந்த தகவலையும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

மேலும் அவரது மொபைலில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்து சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.