கொரோனாவுக்கு பாம்பை சாப்பிட்டால் போதுமா?.. என்னம்மா.. இப்படி பண்றீங்களேமா!!

கொரோனாவுக்கு பாம்பை சாப்பிட்டால் போதுமா?.. என்னம்மா.. இப்படி பண்றீங்களேமா!!

வாடிப்பட்டி அருகே கிராமவாசி ஒருவர் கொரோனாவுக்கு மருந்து என கூறி உயிருள்ள பாம்பினை கடித்து திண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு.விவசாயக் கூலியான இவர், அப்பகுதியில் திரிந்த பாம்பு ஒன்றினை உயிருடன் பிடித்து, கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே அதனை ரசித்து ருசித்து சாப்பிட்டார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இக்காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.