மதுரை மத்திய சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சி...உற்சாகத்துடன் காவலர்கள் அணிவகுப்பு!

பதக்கம் வென்ற சிறைத்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை அணிவித்தும் சான்றிதழ்கள் வழங்கி  கௌரவித்தார்.

மதுரை மத்திய சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சி...உற்சாகத்துடன் காவலர்கள் அணிவகுப்பு!

சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டிற்கான குடியரசுத் தலைவரின் சுதந்திர தினப் பதக்கம் மதுரை மத்திய சிறையில் பணியாற்றி வரும் உதவி சிறை அலுவலர்களான ஜவகர் மற்றும் முனிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் தமிழக முதல்வரால்  வழங்கப்படும் பொங்கல் பதக்கம் மதுரை மத்திய சிறை மற்றும் அதன் கிளை சிறைகளில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர்கள் 9 பேருக்கும் வழங்கப்பட்டது. இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி தலைமையில், சிறைகண்காணிப்பாளர்(பொறுப்பு) வசந்த கண்ணன் முன்னிலையில்  பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பதக்கம் வென்ற சிறைத்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை அணிவித்தும் சான்றிதழ்கள் வழங்கி  கௌரவித்தார்.

தொடர்ந்து சிறைத்துறை காவலர்கள் சார்பில் மத்திய சிறையில் உள்ள மைதானத்தில் காவலர்கள் அணிவகுப்பு  சிறப்பாக நடைபெற்றது. அதன்பின்னர் மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்ட கம்பளி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவைகளை சிறைத்துறை துணைத் தலைவர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.