மதுவால் நேர்ந்த மர்டர்... 7 பேர் கைது...

மதுவால் நேர்ந்த மர்டர்... 7 பேர் கைது...

தேன்கனிகோட்டை அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் இளைஞர்கள் சில இரண்டு பிரிவாக அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டு தரப்பினருக்கு இடையே ஏறபட்ட வாய் தகராறில் ஒருவரை ஒருவர் மது பாட்டில்களால் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் சசிகுமார் என்பவர் பலத்த காயமடைந்தார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தாளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரசன்னா, முரளி, சண்முகம், சசிகுமார், கிரிஷ், ராஜசேகர் மற்றும் மோகன் ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.