ஆளுமையற்ற கட்சியாக அதிமுக உள்ளது.! திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ விமர்சனம்.! 

ஆளுமையற்ற கட்சியாக அதிமுக உள்ளது.! திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ விமர்சனம்.! 

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் அதிமுகவிலிருந்து விலகி திமுகவின் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 

தூத்துக்குடி  மாவட்டம் திருவைகுண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் அதிமுகவிலிருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வென்ற இவர் பின் அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். 

திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த இவர்,  "தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவராகிய நான் 20 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்தேன். தற்போது ஆளுமையற்ற கட்சியாக அதிமுக உள்ளது. ஆனால் தளபதி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளது" எனக் கூறினார்.

மேலும் "ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அதை கண்டுபிடித்து சொல்லவேண்டும். அதிமுகவிலுள்ளவர்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை பின் தொடர வேண்டும்.தமிழ்நாட்டை மீட்க உறுதியான அரசு இருக்கவேண்டும். அது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் மட்டுமே முடியும் .தென் பகுதியில் உள்ள மக்களை வெறுத்து ஒதுக்கியது அதிமுக." என்று தெரிவித்துள்ளார்.