கருவாடு மீனாகலாம் ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருபோதும் அடிப்படை தொண்டராக கூட ஆக முடியாது: சி.வி.சண்முகம் பேச்சு

கருவாடு மீனாகலாம் ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருபோதும் அடிப்படை தொண்டராக கூட ஆக முடியாது என்று  முன்னாள் அமைச்சர்  சிவிசண்முகம் கூறியிருக்கிறார்.

கருவாடு மீனாகலாம் ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருபோதும் அடிப்படை தொண்டராக கூட ஆக முடியாது:  சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்  இன்று காலை நேரில் வந்து கட்சிப் பணி குறித்து கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  சி.வி.சண்முகம், ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியே உண்மையான அதிமுக அணி என்றும்  தங்களுக்கே இரட்டை இலை சொந்தம் என டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளதாக கூறினார்.

  ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட வலுவான அதிமுக அணி எனவும் இதனை யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் கருவாடு மீனாகலாம் ஆனால் அதிமுகவில் சசிகலா ஒருபொழுதும் அடிப்படை தொண்டராக கூட ஆக முடியாது என்று கூறிய சிவி சண்முகம் கூறினார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விடப்பட்டிருந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சார்ந்த ஒப்பந்த பணிகள் தற்போது பணிகள் நடைபெற முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணிகளை உடனடியாக நடத்திட வேண்டும் எனவும் இதன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருவதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை அதனை மதித்து நடக்க வேண்டும் எனவும் புதிதாக நாமாக ஒரு பேரை வைத்து அழைப்பது என்பது தவறு என்றார்.