பிறந்த குழந்தைகளை கூட விடாத கொரோனா...

பிறந்த குழந்தைகளை கூட விடாத கொரோனா...
பிறந்த குழந்தைகளை கூட விடாத கொரோனா...

தமிழக முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் 2வது அலையில் பலரும், பதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றன. இந்நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வந்தாலும், முழுவதுமாக நம்மைவிட்டு போகவில்லை..

அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தற்போது பிறந்த குழந்தைகளையும் கூட விடவில்லை இந்த கொரோனா..
 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து வீடு திரும்பிய நிலையில் குழந்தையின்  தாத்தாவிற்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று கண்டறியப்பட்டது.  மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

அதில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.