செங்கல்பட்டில் தனியார் கார் தொழிற்சாலைப் பணியாளர்கள் போராட்டம்!

செங்கல்பட்டில் தனியார் கார் தொழிற்சாலைப் பணியாளர்கள் போராட்டம்!

செங்கல்பட்டு அருகே பணி உத்தரவாதம் கேட்டு தனியார் கார் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  மறைமலை நகரில்  இயங்கி வந்த  ஃபோர்டு நிறுவனம், கடந்த ஜூலை முதல் கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. ஆனாலும் கடந்த மாதம் வரை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக கூறப்படுகிறது. 

ஆலையை மூடிவிட்டு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்வதாகவும் தெரிவித்தது. ஆனால், தங்களுக்கு நிரந்தர வேலைதான் தேவை என பல தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று  மகேந்திரா சிட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை திறந்து வைக்க வந்த முதல்வர் ஸ்டாலினிடம் அவர்கள் மனுக் கொடுக்க காத்திருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் முதல்வர் சென்ற பின் ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்