மழை காலத்துக்கு முன்பே வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்!

மழை காலத்துக்கு முன்பே வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

வெளிநாட்டுப் பறவைகள்

பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான்,  ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு 247வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

தற்போது மழைக் காலத்தை அறிவிக்கும் விதமாக கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து பருவ துவக்கவதை அறிவுறுத்தும் விதமாக ஆலா பறவைகள் முதலில் வந்துள்ளது. தற்போது சரணாலயத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா உள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது.

லட்சக்கணக்கான பறவைகள்

இப்பகுதியில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியை அறிவிக்கும் விதமாக ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஆலா பறவைகள், அண்டார்டிகாவில் இருந்து வந்துள்ள கடற் காகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது.

பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும்  பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. இந்த பறவைகளை  இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது எனவும் படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.