மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் அடித்து கொலை..!பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடூர சம்பவம்!!

தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் அடித்து கொலை..!பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடூர சம்பவம்!!

தர்மபுரி மாவட்டம் பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னன் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், சென்னனின் சகோதரி உமா என்பவரை ராஜேஷ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், இதுகுறித்து அறிந்த சென்னன் அவரை தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து கொலை நடந்த இடத்தை எஸ்.பி கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்த போலீசார் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.