" ஓநாய்களை ஏமாற்றி விட்டு ஆட்டுக்குட்டிகள் வெளியே வரும்"..! - வைத்திலிங்கம்.

" ஓநாய்களை ஏமாற்றி விட்டு ஆட்டுக்குட்டிகள் வெளியே வரும்"..! - வைத்திலிங்கம்.

தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  "ஓபிஎஸ் டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்ற போது நான் செல்லாமல் இருந்தது  குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏதோ கற்பனையில் பேசி வருகிறார்; மாயமான் சந்திப்பதால் இன்றும் ஆகிவிட முடியாது என கூறியிருக்கிறார். 

"அந்த மாயமான் இல்லையென்றால் அவர் முதலமைச்சர் ஆக இருக்க முடியாது. அண்ணா திமுகவை எடப்பாடி பழனிச்சாமி தனது சொத்தாக்க விரும்புகிறார். அது ஒருபோதும் நடைபெறாது. சண்டிக்குதிரை எதற்கும் உதவாது", என்று விமர்சித்தார்.

மேலும்,  ஓபிஎஸ் டிடிவி சசிகலாவை தவிர்த்து அண்ணா திமுக ஆட்சிக்கு வர முடியாது என்றும் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், "அன்று நடந்த  ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பை 95 சதவீத அண்ணா திமுக தொண்டர்கள் வரவேற்கிறார்கள் என்றும்,  நாங்கள்தான் ஓபிஎஸ் டிடிவி சந்திக்க சொன்னோம் எனவும் கூறினார். 

அதோடு,  முதல் முறை சந்திக்கும் போது கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்பதற்காகத் தான் ஓபிஎஸ் -ஐ மட்டும்  தனியாக சென்று சந்திக்க சொன்னோம் என்றும் கூறினார். 

மேலும், "அதிமுக வலுமை பெற வேண்டும்; ஒற்றுமைப்பட வேண்டும்; ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்று நாங்கள் சிந்திக்கின்றோம். ஆனால் காலில் விழுந்து முதலமைச்சராகி சுய லாபத்தால் பதவி மோகத்தால் இந்த கட்சியை அழிக்க நினைக்கின்றார் எனவும் சாடினார். 

மேலும், அந்தக் கட்சியில் யாரும் வெளியே போகாதவாறு ஓநாய்கள் பாதுகாக்கின்றன எனவும், ஓநாய்களை ஏமாற்றி விட்டு ஆட்டுக்குட்டிகள் வெளியே வரும்.

இதையும் படிக்க      } "பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதம்" இராமதாசு கண்டனம்...!!

தொடர்ந்து, "நிச்சயமாக ஓ.பி.எஸ். சசிகலாவை சென்று சந்திப்பார் என்றும், எடப்பாடி அணியில் இருப்பவர்களும், கட்சி ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள்; இன்றும் அவர் எங்களிடம் பேசி வருகிறார்கள் நிச்சயம் இது நடைபெறும்",  எனவும், கொங்கு மண்டலத்தில் வெகு விரைவில் திருச்சியை விட வெகு சிறப்பான மாநாட்டை நடத்தப்படும் என்றும் கூறினார்.    

இதையும் படிக்க      } மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் "விரைவில் மாற்றம்"!