வியாபாரியின் பணத்தை அபகரித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்... முன் ஜாமீன் மனுவை ரத்து செய்த உயர்நீதி மன்றம்...

யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும். எனும் நம்பிக்கையை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதை  நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

வியாபாரியின் பணத்தை அபகரித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்...  முன் ஜாமீன் மனுவை ரத்து செய்த உயர்நீதி மன்றம்...

மதுரை தல்லாகுளத்தில் சேர்ந்த வசந்தி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவரிடம் 10 லட்சம் பணத்தை ரூபாயை வழி மறித்து பறித்துக் கொண்டதாக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், வசந்தி உள்ளிட்ட ஐந்து காவலர்கள்  மீது வழக்குப்பதிவு செய்ய, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஆய்வாளர் வசந்தி தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார். அதில், "கள்ள நோட்டு மாற்றி கடத்துவதாக  வந்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து சோதனை செய்ய அவரிடமிருந்த 2 பைகளை பரிசோதித்துப் பார்த்தேன். அதில் பணம் எதுவும் இல்லை. ஆனால் தவறான குற்றச்சாட்டின் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வசந்தி கைது செய்யப்பட்டதற்கு பின்னான வழக்கின் விசாரணையின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர், அரசு ஊழியர். இது அவர் சார்ந்திருக்கும் துறையையும் களங்கப்படுத்தும் வகையில் அமைகிறது. 

இதனால் சாதாரண மக்கள் காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது. யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனும் நம்பிக்கையை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதை  நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. என குறிப்பிட்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.