சென்னை உயர்நீதிமன்றம் மூடல்....!! என்ன காரணம்...?

சென்னை உயர்நீதிமன்றம் மூடல்....!! என்ன காரணம்...?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நுழைவாயில்கள் ஒரு நாள் மூடப்படுகின்றன. 

நீதிமன்ற கட்டடம் :

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டிடமான உயர்நீதிமன்றம் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் நீதிமன்ற வளாகத்தையே வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.

வழிப்பாதை உரிமை :

இதனை கருத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம் , வளாகத்தின் வழிப்பாதைகளை மக்கள் வருங்காலத்தில் உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மூடப்படும் என்று அறிவித்தது.

வாயில்கள் மூடல் :

இந்த நடைமுறையானது ஒவ்வொரு ஆண்டும்  கடைபிடிக்கபட்டு வருகிறது. அதன்படி நீதிமன்ற வளாக வாயில்கள் நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 வரை மூடப்படுகின்றன. அப்போது பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என யாருக்கும் அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்படுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் ஹரி வெளியிட்டார். 

இதையும் படிக்க : இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர் நியமனம்...!