சென்னை சேலம் எட்டு வழி சாலையில் அரசின் நிலைப்பாடு என்ன? - எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை - சேலம் 8 வழிசாலை திட்டத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை சேலம் எட்டு வழி சாலையில் அரசின் நிலைப்பாடு என்ன? - எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

தமிழக சட்டப்பேரவையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், சென்னை சேலம் எட்டு வழி சாலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை-சேலம் 8 வழிசாலை ஏற்கனவே 6 வழி சாலையாக மாறிவிட்டதாகவும், இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்பதே கட்டாயமாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், தமிழக அரசைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த அதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாக கூறிய எ.வ.வேலு, எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  குறிப்பிட்டார்.