"வெல்க அண்ணன் உதயநிதி"... பதவியேற்றதுமே கோஷம் எழுப்பிய திமுக உறுப்பினர்... கடுப்பான வெங்கையா நாயுடு...!

"வெல்க அண்ணன் உதயநிதி"... பதவியேற்றதுமே கோஷம் எழுப்பிய திமுக உறுப்பினர்...  கடுப்பான வெங்கையா நாயுடு...!

அதிமுகவின்  மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதையடுத்து அவர்களின் இடம் காலியானது.  காலியான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் போட்டியின்றியும் வெற்றி பெற்றனர்..

இந்நிலையில் இன்று தொடங்கிய குளிர்கால கூட்ட தொடரில்,  திமுகவை சேர்ந்த எம்எம் அப்துல்லா, கேஆர்என் ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகியோர் எம்பியாக பதவியேற்று கொண்டனர். 3 பேருமே தமிழில்தான் பதவியேற்று கொண்டனர்..

இதில், கேஆர்என் ராஜேஷ்குமார் பதவியேற்கும்போது, "வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி" என்று முழக்கமிட்டுள்ளார்..இதை பார்த்த துணை குடியரசு தலைவர் வெங்கைய்ய நாயிடு இங்கு முழக்கங்கள் இடவேண்டாம், வெளியில் சென்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் என தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தலில் போட்டியின்றி முதல்முறையாக எம்.எல்.ஏ வாக உள்ளார் உதயநிதி. அப்படி இருக்க அவரது பெயரை ஏன் டெல்லியில் சென்று முழங்க வேண்டும் என்றும் முக. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிதான் என்பதை உறுதிப்படுத்த அமைந்த முழக்கமா இது ? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.