எச்.ராஜாவின் சர்ச்சைக்கு இதோடு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்- பாஜக அண்ணாமலை  

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எச்.ராஜாவின் சர்ச்சைக்கு இதோடு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்- பாஜக அண்ணாமலை   

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் "சாவர்கர்: எ கான்ஸ்டண்ட் லெகசி"  புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இவ்விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, எழுத்தாளர்  விக்ரம்சம்பத்துடன் இணைந்து புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காந்தியின் கொலைக்கும் சாவர்க்கர்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாவர்க்கர் காந்தியின் கொலையோடு சம்பந்தப்படுத்தபட்டுள்ளார். ஹிந்து மகாசபையில் இருத்ததால் கோட்சேவை பாஜக ஆதரிக்கிறது என்கிறார்கள். காந்தியின் மரணத்திற்கு காரணமான கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றார்.

எச். ராஜா அற்புதமான மனிதர் அவர் பேசியதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார் .பாஜக சார்பில் நானும் பதில் அளித்துள்ளேன்.பாஜக பத்திரிக்கையாளர்களை மதிக்கக்கூடிய கட்சி. நாங்கள் பத்திரிகையாளர்களை வைத்து அரசியல் செய்யவில்லை என்றார். இதோடு எச். ராஜா அவர்களின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளிவைக்க வேண்டும் என்றார்.