ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் புதிய உத்வேகம் பெற்றுள்ளோம்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேட்டி...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மதிமுக புதிய உத்வேகம் பெற்று உள்ளது வைகோ கூறியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் புதிய உத்வேகம் பெற்றுள்ளோம்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேட்டி...
Published on
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் மதுரையில் இருந்து வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி வந்தனர். அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மதிமுகவினர் சான்றுகளை வழங்கி ஆசி பெற்றனர். அப்போது வைகோ அவரது மகன் ஆகியோருக்கு வீரவாள் வழங்கப்பட்டது. பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி 99 சதவீதம் வெற்றி பெற்று உள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஊரக உள்ளட்சி தேர்தலில் 17 ஒன்றிய கவுன்சிலர்களும் 2 மாவட்ட கவுன்சிலர்களும் 87 ஊராட்சி மன்றங்களில் வெற்றி பெற்று உள்ளோம். குருவிகுளம் ஒன்றியத்தில் 17 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்களில் மதிமுக வெற்றி பெற்று உள்ளது. 

ஊரக உள்ளட்சி தேர்தல் மதிமுகவினருக்கு புத்துணர்ச்சி, புதிய உத்வேகத்தை எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி 4 கால் பாய்ச்சலில் மதிமுக முன்னேறி செல்லும். 3 மாத காலத்தில்  இளைஞர்கள் மதிமுகவில் இணைந்து வருகின்றனர். 

மதிமுகவின் எதிர்கால திட்டங்களை வகுக்க 20ந் தேதி நடக்கிறது. துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்குவது குறித்து 20ந் தேதி தான் தெரியவரும். அரசியலுக்கு வருவதில் விருப்பம் கிடையாது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரின் கருத்துகளை கேட்டு முடிவு செய்யப்படும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com