அமராவதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...

அமராவதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...

உடுமலை அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 
Published on
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியிலிருந்து சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 
மேலும், அமராவதி அணை திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது . 
இந்நிலையில் இன்று முதல் 9 நாட்களுக்கு அமராவதி ஆற்றின் மூலம்  பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  மேலும்,  அமராவதி பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் 25 ஆயிரத்து 650 ஏக்கர் புதிய பாசன பகுதிகளுக்கு  ஆயிரத்து 643 மி கனஅடி தண்ணீரை பொதுப்பணித் துறை மூலம் திறந்து விடப்பட்டது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com