வாக்கு என்னும் வலிமை மிக்க ஆயுதத்தை...அநீதிக்கு எதிராக வாக்கை பயன்படுத்த வேண்டும் - சீமான்!

வாக்கு என்னும் வலிமை மிக்க ஆயுதத்தை...அநீதிக்கு எதிராக வாக்கை பயன்படுத்த வேண்டும் - சீமான்!

இரட்டை இலை மற்றும் கை சின்னங்களுக்கு செலுத்தும் வாக்கு செல்லாத வாக்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதி நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து  சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வாக்கு என்பது குடிமக்களின் வலிமை மிக்க ஆயுதம் என்றும், அதை அநீதிக்கு எதிராக பயன்படுத்துபவரே சிறந்த குடிமகன் என்றும் கூறினார்.

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரம் ஓய்ந்தது...!

சாதி மத உணர்வுகளை புறந்தள்ளி தமிழர்கள் என்ற உணர்வுடன் இணைந்தவர்களே நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் என்று கூறினார். தமிழ்நாட்டில் புரட்சி தீயை பற்ற வைத்த கட்சி தான் நாம் தமிழர் கட்சி என்று கூறிய அவர், திராவிட மாடல் ஆட்சி பழைய மாடல் ஆட்சி என்று கூறும் காலம் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இரட்டை இலை மற்றும் கை சின்னங்களுக்கு செலுத்தும் வாக்கு செல்லாத வாக்கு என்றும் குறிப்பிட்டார்.