விழுப்புரம் டூ தேனி நோக்கி மிதிவண்டி பயணம்...! விழிப்புணர்வை ஏற்படுத்த வந்த பனையேறி குடும்பத்தினர்..!

விழுப்புரத்தில் இருந்து தேனி நோக்கி- மிதிவண்டி மூலமாக மாணவிகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வந்த பனையேறி குடும்பத்தினர்.

விழுப்புரம் டூ தேனி நோக்கி மிதிவண்டி பயணம்...! விழிப்புணர்வை ஏற்படுத்த வந்த பனையேறி குடும்பத்தினர்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த பனையேறி பாண்டியன்(42) தலைமையில் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொண்ட பனை விழிப்புணர்வு இயக்கத்தினர் இன்று காலை தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு மிதிவண்டி மூலமாக வந்தனர்.

அப்போது அவர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி சென்று தர்மபுரியில் இருந்து மிதிவண்டி மூலமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள், தர்மபுரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் , திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பாரதி மற்றும் எங்கள் குழந்தைகள் வீனஸ், செம்மொழி, அணி நிலா ஆகியோர் மூலம் பயணத்தை துவக்கினோம்.

இந்த பயணத்தில் ஆறாம் திணையான பனை மரத்தை தேடியும், அதனை சார்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கிற பனையேறிகளை தேடியும், பனையை பற்றிய முழு புரிதலை உண்டாக்க வேண்டும் என்றும் பனை உணவுகளின் இன்றைய தேவையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் இந்த பயணத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், கடந்த 85 ஆண்டு காலமாக தமிழர்களின் உணவான பனங்கல்லை தடை செய்து வைத்து இருக்கிறார்கள். அந்த தடையை நீக்கி ஊட்டச்சத்தும் மருத்துவ குணமும் அடங்கிய, நமது பாரம்பரியமான பனங்கல்லின் தடையை நீக்க வேண்டும். வருடம் முழுவதும் பனையில் இருந்து பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய அத்தனை தகுதிகளும் பனைக்கும், பனை தொழிலுக்கும் உண்டு அதனை கொண்டு சேர்ப்பது தான் இந்த பயணத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.