மது கடையில் மீதி சில்லரை கேட்ட முதியவரை மது கடை ஊழியா் தாக்கும் வீடியோ வைரல்...!

மது கடையில் மீதி சில்லரை கேட்ட முதியவரை மது கடை ஊழியா் தாக்கும் வீடியோ வைரல்...!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு சில்லரை கேட்ட முதியவரை மதுகடை ஊழியர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவா், புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மது வாங்கி கொண்டு மீதி  சில்லரை கேட்டுள்ளார்.

அதற்கு மது கடை ஊழியர் செல்வம் என்பவா், சில்லரை ஏற்கனவே  தந்து விட்டதாக கூறி முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையெடுத்து மதுபான கடை ஊழியா் முதியவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.