தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நான்காயிரமாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில்  நீண்ட நாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 4 ஆயிரமாக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 35 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 115 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 32 ஆயிரத்து 993 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 724 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 474 பேருக்கும், ஈரோட்டில் 360 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொறுத்தவரை 227 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.