மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் இன்று தீர்ப்பு...!

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் இன்று தீர்ப்பு...!

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் 500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த மாதம் 22-ந்தேதி ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.

முன்னதாக மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேரை  அதிமுக அரசு கடந்த 2011-ம் ஆண்டு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது