தடுப்பூசி மையங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி!

சென்னையில் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தடுப்பூசி மையங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி!

சென்னையில் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் நேற்று தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் செயல்படவில்லை. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், இன்றும் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி மையங்கள் செயல்பாடாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்ப வேண்டுமென்றும், முகாம்கள் இடைவிடாமல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.