இந்தியாவிலேயே 100 % கொரோனா தடுப்பூசி போட்ட முதல் தமிழக மாவட்டம் இதுதான்...

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்களில் முழுமையான 100 சதவீதத்தை  எட்டியது தமிழகத்தில் உள்ள உதகை மாவட்டம்., இங்கு ஐந்து லட்சத்து 16 ஆயிரம் பேர் கோவிட் தடுப்பூசி போட்டு உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவிலேயே 100 % கொரோனா தடுப்பூசி போட்ட முதல் தமிழக மாவட்டம் இதுதான்...

மதுரையில் நடைபெற்ற கொரோனா தடுப்புசி முகாம் குறித்து ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது, பொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது தமிழக முதல்வர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மிகச்சிறப்பாக வெற்றி இடையே எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்த முகாம் வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார்கள். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை என பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தோம். அதில் மக்கள் விறுவிறுப்பாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்கு பொதுமக்கள் இடையே ஏற்பட்ட தடுப்பூசி குறித்த ஆர்வம்தான் காரணம் என்றார்.

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம். ஆனால்., மாண்புமிகு முதல்வர் அவர்கள் கடந்த ஒரு வாரமாக ஆலோசனைகள் கூறிய வழிகாட்டுதலின்படி செயல்பட்டதில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இருபத்தி ஆறு லட்சத்து 11 ஆயிரம் பேர் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இது ஒரு மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்தார். இதுவரை 3 லட்சத்து 74 ஆயிரம்தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று நடந்த சிறப்பு முகாம் மூலம் 26 ஆயிரத்து 11,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மொத்தம் 4 இலட்சத்து 11 ஆயிரம் பேர் என்ற இலக்கை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 754 மாவட்டங்களில் 100% தடுப்பூசி போட்ட மாவட்டம் என்ற இலக்கை தமிழகத்தில் உள்ள உதகை முதலிடம் பிடித்துள்ளது.

பல்வேறு ஊர்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர். சில இடங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம். கூடுதலாக வந்தவர்கள் நாளை தடுப்பூசி போட்டுக்கொள்ள பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். மழை கிராமங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் மக்கள் தன்னார்வம் இல்லை அப்பகுதிகளில் தன்னார்வமாக செயல்பட முகாம்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வுபடுத்த அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

நீட் தேர்வு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே வெளிப்படையாக முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து கருத்துக்களை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க ஏ.கே ராஜன் குழுவினரிடம் ஆலோசனை மற்றும் சட்ட வல்லுநர்கள், 84 ஆயிரம் பொதுமக்கள்அனைத்து தரப்பினரிடம் குறைகளை கேட்டு அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுசுவர் கட்டப்பட்டு தற்போது கட்டாந்தரையாக உள்ளது.

இதில் மாணவர் சேர்க்கை என்பது 150 பேருக்கு இடவசதி இல்லாததால் ஒன்றிய அரசு கூறிய சில கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. அதனால் செயல்படுத்த இயலவில்லை எய்ம்ஸ் மருத்துவமனை என்பது நவீன வசதிகள் மற்றும் புது அரங்கியல் கொண்டதாக இருக்க வேண்டும். ஆகையால் இங்கு பயில்பவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாத சூழ்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி, கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது இயலாத ஒன்று ஆகையால் முதலில் கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். விரைவில் கட்டிட பணிகள் துவங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.