பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வலியுறுத்தல்...

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்ற அனுமதியைப்  பெற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அது ஏற்கத் தக்கது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு  உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற   வலியுறுத்தல்...

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட போதும் மத்திய அரசு அதனை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. 

இந்நிலையில் இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தன.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மத்திய அரசு அண்மையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு  உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இல்லாவிட்டால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.