1000 ரூபாய் பாஸ் வைத்திருப்பவர்களா.? உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது பா.! அரசின் அதிரடி அறிவிப்பு.!

1000 ரூபாய் பாஸ் வைத்திருப்பவர்களா.? உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது பா.! அரசின் அதிரடி அறிவிப்பு.!

ஜூலை 26ஆம் தேதி வரை ஆயிரம் ரூபாய் பாஸ்களை பயன்படுத்தி மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மே மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அரசின் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அதைத் தொடர்ந்து சென்னை,திருவள்ளுவர்,செங்கல்பட்டு.காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில்  பேருந்துகள் இயக்கப்பட்டன.  

அப்போதே மே மாதம் 1000 ரூபாய் பாஸ் எடுத்தவர்கள் இந்த மாதமும் அதை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த பஸ் பாஸுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 26ஆம் தேதி வரை ஆயிரம் ரூபாய் பாஸ்களை பயன்படுத்தி மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.