" ஊழலற்று செயல்பட்ட தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர...." - நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி..!

ஊழலற்று செயல்பட்ட தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, நான் சென்று என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்க முடியாது என நடிகர் எஸ்.வி. சேகர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

" ஊழலற்று செயல்பட்ட தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர...." - நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி..!

ஊழலற்று செயல்பட்ட தன்னை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, நான் சென்று என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்க முடியாது என நடிகர் எஸ்.வி. சேகர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அற்புத ஶ்ரீ ராகவேந்திர சுவாமக ஆலயத்தில், ஸ்ரீ ராகவேந்திரரின் 351 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ராகவேந்திரரின் தேர்த்திருவிழாவில் பங்கேற்றார். 

பின்னர் ராகவேந்திரர் குறித்த புத்தகத்தை வெளியீட்டார். மேலும், செய்தியாளர்களை சந்தித்த அவர், " வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு, 400 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும், அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்த்து பேசி வரும் கட்சியினர் ஆச்சிரியத்தில் வாயடைத்து நிற்பார்கள் " என தெரிவித்தார். மேலும் பேசிய அவரிடம், கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,  இந்த விஷயத்தில் கருத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் உங்கள் கருத்தை மட்டும் தான் சொல்ல முடியும், என் கருத்தை சொல்ல உரிமை இல்லை என்றால், அது கருத்து சுதந்திரம் இல்லை.. கருத்து திணிப்பு..என்றும் ஊழலற்று செயல்பட்ட தன்னை, பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர தானே சென்று தன்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்க முடியாது. சிறப்பாக செயலாற்றும் அண்ணாமலை தன்னை பயன்படுத்திக்கொண்டால் மேலும் சிறப்பாக பணியாற்ற முடியும் என பேசியுள்ளார்.