சிலிண்டர் குடோனில் திடீர் தீவிபத்து! 12 காயம்!

தேவேரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாய் சிலிண்டர் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கியவர்களில் மிகவும் அதிகமான தீக்காயங்களுடன் இருந்த 7 நபர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிலிண்டர் குடோனில் திடீர் தீவிபத்து! 12 காயம்!

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம்  கிராமத்தின் அருகே உள்ள தனியார்  சிலிண்டர் குடோன் திடீரென வெடித்து விபத்து உள்ளாகியது இதனால் கேஸ் குடோனில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதன் வழியாக டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்களை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சிக்கான குடோனை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேர்முக உதவியாளராக பணியாற்றிய அஜய்குமார் தம்பி ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க | உத்திரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை...முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரகடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்தது தொடர்ந்து கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது.

இதன் காரணமாக வீட்டின் அருகிலேயே இருந்த ஜீவானந்தம், பூஜா (19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32), நிவேதா (21), தமிழரசன் (10), சண்முகப்பிரியன், ஆமோத்குமார், என மொத்தம் 12 பேரும் 90% தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | ஜார்க்கண்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவியின் வயது வெறும் 15 தானாம்..!

இதனைத் தொடர்ந்து 12 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆனால் சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்கள் உள்ள 7 நபர்களை மேற்பட்ட சிகிச்சைக்காக சேனையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் யார் என்றால்,

  • தமிழரசன் (10 வயது)
    S/O சுகுமாறன்
    தேவரியம்பாக்கம்
  • நிவேதா
    S/O ஜீவானந்தம்
    தேவரியம்பாக்கம்
  • சக்திவேல்
    S/O மாணிக்கம் 
    பண்ருட்டி
  • கோகுல்
    S/O வாசு
    தேவரியம்பாக்கம்
  • கிஷோர் (13 வயது)
    S/O பிரகாஷ்
    தேவரியம்பாக்கம்
  • ஆமோத்குமார்
    S/O சீத்ராமன்
    தேவரியம்பாக்கம்
  • சண்முகப்பிரியன்
    S/O பூபதி

சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் : 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம் !!

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சிபுரம், மறைமலைநகர் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் 2 மணி நேரம் போராட்டம் பின்பு தீயை அணைத்தனர், மேலும் அப்பகுதியில் சிலிண்டர் வாயு கசிவு காரணமாக யாரும் அருகே அனுமதிக்கப்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ,வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி ஆகியோர் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் கேஸ் குடோனில் இருந்து கேஸ் வெளியேறி வருவதால் பகுதி முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | சென்னை: இரண்டாவது நாளாக பற்றி எரியும் தனியார் எண்ணெய் கிடங்கு..! விண்ணை முட்டும் புகைமூட்டம்..!

--- பூஜா ராமகிருஷ்ணன்