காவல்துறையில் மேலும் ஒருவர்... சேலத்தில் உடல் தகுதி தேர்வில் திருநங்கை தேர்ச்சி...

சேலத்தில் உடல் தகுதி தேர்வில் திருநங்கை தேர்ச்சி

காவல்துறையில் மேலும் ஒருவர்... சேலத்தில் உடல் தகுதி தேர்வில் திருநங்கை தேர்ச்சி...

சேலத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான முதற்கட்ட உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற திருநங்கை தேர்ச்சி பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் பெண் காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 460 பெண்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரூபா என்ற திருநங்கையும் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.