

சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு டூரிசம் கட்டுப்பாட்டில் இயங்கும் உணவகத்தை நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன், தனியார் உணவகங்களுக்கு இணையாக தமிழ்நாடு டூரிசம் உணவகங்களில் பொது மக்களை ஈர்க்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று குறைந்த பிறகு சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.பின்னர் தீவுத்திடல் பகுதி முழுவதையும் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் பராமரிப்பு பணிகள், உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.