திருவள்ளூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!!

ஆவடி பிருந்தாவன் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவர், ஆவடி-இந்துக்கல்லூரி ரயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல், ஆவடி தேவி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற முதியவர், ஆவடி-அண்ணனூர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விரைவு ரயில் மோதி உயிரிழந்தார்.