திருப்பூர்: கால் முறிந்தும் ஸ்டெச்சரில் படுத்தபடி ஒட்டு போட வந்த இளைஞர்

திருப்பூரில் விபத்தில் கால் முறிந்த இளைஞர் ஒருவர் ஸ்டெச்சரில் படுத்தபடி வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

திருப்பூர்: கால் முறிந்தும் ஸ்டெச்சரில் படுத்தபடி ஒட்டு போட வந்த இளைஞர்

திருப்பூர் மாவட்டம் பத்மாவதிபுரத்தை சேர்ந்தவர் ஜானகி ராமன். 20 வயதான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக, ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடி மையத்திற்கு வந்து, ஸ்டெச்சரில் படுத்தபடி சென்று மும்மூர்த்தி நகர் வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.