துரோகம் இழைத்தவர்கள் அதற்குரிய பரிகாரத்தை அடைந்தே தீர வேண்டும்: ஆர்.பி உதயகுமார் காட்டம்

துரோகம் இழைத்தவர்கள் அதற்குரிய பரிகாரத்தை அடைந்தே தீர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

துரோகம் இழைத்தவர்கள் அதற்குரிய பரிகாரத்தை அடைந்தே தீர வேண்டும்: ஆர்.பி உதயகுமார் காட்டம்

துரோகம் இழைத்தவர்கள் அதற்குரிய பரிகாரத்தை அடைந்தே தீர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் கலந்தாய்வு  கூட்டம் டி.குன்னத்தூரில் நடைபெற்றது. அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்கள், அந்த சின்னத்தை தோற்கடிக்க செயல்பட்டதால் அதிமுக ஆட்சியை பறிகொடுத்ததாக குறிப்பிட்டார்.