செங்கோல் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை ; அது ஒரு கட்டுக்கதை - மூத்த பத்திரிகையாளர் பேச்சு.....

கர்நாடகாவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியினால் தமிழகத்தில் காலூன்ற செங்கோல் போன்ற் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கோல் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை ; அது ஒரு கட்டுக்கதை  - மூத்த பத்திரிகையாளர் பேச்சு.....

சென்னை அண்ணா சாலை உள்ள காமராஜர் அரங்கத்தில் தேசிய சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதுதேசிய சிந்தனையாளர்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கோப்பண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தி இந்து  நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளரும் என் ராம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.


இவ்விழாவில் தொடர்ந்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர்  என் ராம்

"செங்கோல் பற்றி பல கட்டுக்கதைகள் தற்போது அரசியலில் வந்து உள்ளது. தற்போது நடிகர்கள் வைத்து நடித்து இந்த கட்டு கதையை அரசு இனைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். 

நேரு பிரதமாராக பதவி ஏற்பதற்கு ஏதேனும் விழா நடத்த வேண்டுமா  என மவுண்ட் பேட்டன் பிரபு கேட்டதாக சொல்வதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது இவர்கள் சொல்வது கட்டுக்கதை. டெல்லியில் மவுண்ட் பேட்டன் பிரபுவை ஆதினம் சந்தித்ததாக சொல்வதும் பொய். அந்த கால கட்டத்தில் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுத்ததாக சொல்வது கட்டுக்கதை. இவர்கள் தான் அதிகார மாற்றத்திற்காக  கொடுக்கப்பட்டதாக சொல்லிக் கொள்கின்றனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி நேருவை சந்திப்பதற்கு முன்பாக மவுண்ட் பேட்டன் பிரபுவை  ஆதினங்களை சந்திக்க வாய்ப்பில்லை அவர் டெல்லியில் அன்று கிடையாது.

மேலும் படிக்க | பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு...ஜப்பானுக்கு வந்தது நீங்கள்தான்”

செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து அதை அவர்  நேருவிடம் கொடுக்க சொன்னதாக சொல்வது அனைத்தும் கட்டுக்கதை. ராஜாஜிக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நடக்காத நிகழ்வை நடந்ததாக சொல்வதற்கு இந்துத்துவாதான் காரணம்.பிரதமராக பதவி ஏற்பு என்பது முக்கிய நிகழ்வு அன்று பல பரிசுகள் நேருவின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒன்றுதான் செங்கோல் அதனால் தான் அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.அங்கு கோல்டன் ஸ்டிக் என்றுதான் உள்ளது வாக்கிங் ஸ்டிக் என்று இல்லை.அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுத்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து... டெல்லி செல்லும் அமைச்சர்!

இந்த செங்கோல் நிகழ்வினால் தமிழகத்திற்கு எந்தவித பெருமையும் கிடைத்து விடப் போவதில்லை தனியார் நகைக்கடை தயாரித்த செங்கோலை தான் பிரதமர் தரையில் விழுந்து வணங்கியுள்ளார் ஆகவே அது அந்த நிறுவனத்திற்கு தான் பெருமை.செங்கோல் நிகழ்வு  மூலம்  ஏதேனும் ஆதாயம் கிடைத்து விடுமா என பாஜகவினர் முயற்சி செய்கின்றனர் அது ஒரு போதும் நடக்காது. கர்நாடகாவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியினால் தமிழகத்தில் காலூன்ற இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.