என் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை, நான் நிரபராதி..! ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு.!   

என் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை, நான் நிரபராதி..! ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு.!   

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்ட  வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

 திருமணம் செய்து கொள்வதாகக் கூறி  ஏமாற்றியதாவும்,  கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும்  நடிகை  சாந்தினி அளித்த புகாரில் மணிகண்டனுக்கு எதிராக  பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறையின் தனிப் படை கைது செய்தது  .

அதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்ட மணிகண்டன் பின் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார்.  

அந்த மனுவில் என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. நான் திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும்  ஏமாற்ற வில்லை என்றும், எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நான் நிரபராதி, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.