தமிழை எதிர்த்தால் இளைஞர்கள் சும்மா விட மாட்டார்கள்...எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்!

தமிழை எதிர்த்தால் இளைஞர்கள் சும்மா விட மாட்டார்கள்...எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்!

தமிழ்நாட்டில் கட்டாய தமிழை எதிர்த்து பள்ளி நிர்வாகத்தினர் நீதிமன்றம் சென்றால் அவர்களை இளைஞர்கள் சும்மா விட மாட்டார்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ராமதாஸ், தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை கடந்த 21ம் தேதி சென்னையில் தொடங்கினார். இந்த பயணத்தை செவ்வாய்கிழமை மதுரையில் நிறைவு செய்தார்.  

இதையும் படிக்க : டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்த உதயநிதி...!

இந்நிலையில் திண்டுக்கல்லில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராமதாஸ் குழந்தைகளுக்கு பிற மொழி கலப்பில்லாமல் தமிழில் பேச கற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கட்டாய தமிழை எதிர்த்து பள்ளி நிர்வாகத்தினர் நீதிமன்றம் சென்றால் அவர்களை இளைஞர்கள் சும்மா விட மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.