காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த பரிதாபம்...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இரவு காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், பத்து மணி நேரத்திற்கு பிறகு இளைஞர் மீட்கப்பட்டார்.

காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் கிணற்றில் தவறி விழுந்த பரிதாபம்...

பள்ளிபாளையம் புதன் சந்தப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனியார் நூற்பாலை அருகே உள்ள கிணற்று பகுதியில்  நின்றுகொண்டு நேற்று இரவு தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆஷிக் கால் தவறி கிணற்றில் கீழே விழுந்தார்.

இதன் பின்னர் கூச்சலிட்ட இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வராத நிலையில், கடந்த பத்து மணி நேரத்திற்கு மேலாக இரவில் கிணற்றில் உள்ள தண்ணீரில் இளைஞர் தத்தளித்துக்கொண்டிருந்தார். இதன் பின்னர் காலையில் இளைஞரின் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் இளைஞரை கயிறு மூலம் கட்டி மீட்டனர். இதில் இளைஞரின் கை முறிவு ஏற்பட்டதால் அவரை பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.