திருமணம் செய்து கொள்ள சொன்னதால் பெண் தற்கொலை...
திருவள்ளூரில் பெற்றோர்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அடுத்த பன்னூர் அந்தோணியார்புரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் இவரது மனைவி லில்லி இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது இரண்டாவது மகள் விசாலி (26) கள்ளம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
விசாலி திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றி தீ பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விசாலியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீ காயங்களுடன் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.