கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...31 பேர் படுகாயம்...!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலையில் சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், 31 பேர் படுகாயமடைந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...31 பேர் படுகாயம்...!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர்கள் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேனில் சென்றுள்ளனர். துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் ஆவட்டி, குடிக்காடு அருகே வேன் வந்துகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த இருபத்தி ஒன்பது பேர் மற்றும் சாலையின் எதிரே வந்த இருவர் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.