பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வாய்ப்பில்லை: மத்திய அரசை வெளுத்து வாங்கிய பிடிஆர்...

தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வாய்ப்பில்லை: மத்திய அரசை வெளுத்து வாங்கிய பிடிஆர்...

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என தெரிவித்தார்.

 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை 32.90 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ரூ.32. 90 வரியில் ரூ.31.50 மத்திய அரசுஎடுத்துக்கொள்கிறது. ரூ.32. 90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டினார்.

 தமிழ்நாட்டில் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால் இதில் நான்கு பைசா மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு வரி கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தால் அதை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுப்பது போன்றதாகும். வரி பங்கீட்டில் அநீதி நடைபெறுகிறது.

 98 ரூபாய் விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூபாய் 70 மத்திய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும் என தெரிவித்தார்.