கோவையில் நிகழ்ந்த வினோதம்....! சடலத்தின் மீது அமர்ந்து அகோரி பூஜை...!

கோவையில் நிகழ்ந்த வினோதம்....!  சடலத்தின் மீது அமர்ந்து அகோரி பூஜை...!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட நண்பரின் உடல் மீது அமர்ந்து அகோரிகள் சிவபூஜை  நடத்தி இறுதிச் சடங்கு செய்தனர். 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்ப பாளைத்தை சேர்ந்தவர் மணிகண்டன். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணமான  நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், குடும்ப பிரச்சனையால்  மனவேதனையில் இருந்த மணிகண்டன், நேற்றைய தினம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மணிகண்டனுடன் சிறுவயது முதலே நண்பராக பழகி வந்த திருச்சியை சேர்ந்த அகோரி சாமியார், அவரது மரண செய்தி கேட்டு சூலூர் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றார். 

இதையும் படிக்க     | " அறிவிப்பை திரும்பப் பெறவில்லை எனில்,... டி.கே.சிவக்குமார் இல்லத்தை முற்றுகையிடுவோம்...! " - செல்ல.ராசாமணி.

அப்போது  காசியில் அகோரிகள், பிணத்தின் மீது அமர்ந்து இறுதி சடங்குகள் மேற்கொள்வதைப் போல , மணிகண்டனின் உடல் மீது அமர்ந்த சாமியார், அகோரிகள் படை சூழ; சிவ வாத்தியங்களுடன் காலபைரவர் பூஜை நடத்தி இறுதி சடங்கு செய்தார். 

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மயானத்துக்கு வந்து அகோரி சாமியாரின் சிவ பூஜையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க     |  "ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்" அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை!