இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து குமாரபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அத்தியப்பன் நாமக்கல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் சமீப காலமாக போலீசார் செல்போன், மாமுல் என அற்ப காரணங்களுக்காக பொதுமக்களை தாக்குவதும், அதில் அப்பாவிகள் சிலர் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த காலங்களில் நடந்த இதுபோன்ற கொடூர சம்பவங்களை அரசு மூடி மறைத்து இழப்பீட்டு தொகை கொடுத்தாலும் இழந்த உயிருக்கு இழப்பீடு ஒன்று மட்டும் போதுமா?