"தாய் பாசம்" தன் உயிரை பணயமாக வைத்த மகன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

"தாய் பாசம்" தன் உயிரை பணயமாக வைத்த மகன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

பாம்பிடமிருந்து தாயைக் காப்பாற்ற முயன்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

ஓட்டையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது , அங்கிருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைக் கவனித்த அவர்களுடைய ஐந்து வயதுடைய மகன், தாயைக் கடித்துவிடக் கூடாது என்று பாம்பை விரட்ட முயற்சி செய்துள்ளான்.

மயக்கடைந்த சிறுவன்

ஆனால், அந்த பாம்பு சிறுவனைக் கடித்துவிட்டது. மயக்கமடைந்த சிறுவனை, அருகிலிருந்தவர்கள் கடம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் முதலுதவி அளித்து நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்?

நெல்லை மருத்துவமனையில் சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறி, உடலை உடற்கூறாய்வுக்கு அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தாயைக் காப்பாற்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.