ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ...

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 5 ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ...

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என்றஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எழுவர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு, கொரோனா ஊரடங்கு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .