காதலியின் அந்தரங்க புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய காதலன் - புரட்டி எடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகே காதலியின் அந்தரங்க புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய காதலனை பொதுமக்களும், உறவினர்களும் அடித்து துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதலியின் அந்தரங்க புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய காதலன் - புரட்டி எடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள  கருதனம்பட்டியை சேர்ந்தவர் சம்பத். கூலி வேலை செய்து வரும், இவருக்கு சங்கவி என்ற பெண்ணும் ஒரு மகனும் உள்ளனர். சங்கவி கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து வந்தார்

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரத்தை சேர்ந்த மேகநாதன் என்பவருடன் சங்கவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களின் பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தங்களது காதலை சமூக வலைதளம் மூலம் வளர்த்து வந்த நிலையில் நாளடைவில் இருவரும் நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர் 

இந்நிலையில் அந்த பெண்ணிற்க்கு விட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மேகநாதன் அந்த பெண்ணிடம் தனியாக பேச வேண்டுமென , வரவழைத்து அவரின் செல்போன் மூலம் அவருடைய உறவினர்களின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் வீடியோ காலில் இருவரும் உள்ளாடையின்றி பேசியதை ஸ்கீரின் ஷார்ட் எடுத்து வைத்து அதனை பெண்ணின் உறவினர் எண்ணுக்கு மேகநாதன் அனுப்பியுள்ளார்.

அதிர்ந்துபோன உறவினர்கள் இச்சம்பவம் குறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மேகநாதனை அழைத்து விசாரித்துள்ளனர். அதில் நான் செய்தது தவறு தான் இனி இது போல் செய்யமாட்டேன் என்று தெறிவித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது 

இந்நிலையில் இம்மாதம் 9- ம் தேதி அந்த பெண்ணிற்க்கு திருமணம் முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மேகநாதன் அவரை மிரட்டியது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை திருமணம் செய்ய இருந்த மணமகனுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளான்

இதனை அறிந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியதாகவும், இதனால் மன வேதனையடைந்த சங்கவி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் கொதித்தெழுந்த உறவினர்கள், பெண்ணிடம் மேகநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளனர்.

மகிழ்ச்சியடைந்த மேகநாதன் நேற்று இரவு தனது நண்பர்கள் மூவருடன் வேடசந்தூர் அருகே உள்ள சங்கவியின் சொந்த ஊரான கருதனம்பட்டிக்கு காரில் வந்துள்ளார். பின்னர் அவரது காரை மறித்த சங்கவியின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் மேகநாதனை பிடித்து சரமாரியாக அடித்து வெளுத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து எரியோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மேகநாதன் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.