நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்...

திருச்சியில் நில அளவை செய்ய வந்த அரசு அதிகாரிகளைக் ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்டது. துறைகுடிபஞ்சாயத்து இந்தப் பகுதியில் உள்ள குளக்கரை ஓரம் புறம்போக்கு நிலம் 5 ஏக்கர் சுமார் 120 கட்டிடத் தொழிலாளர்களுக்கு தோராய பட்டா வழங்க அரசு தரப்பில் இன்று நில அளவை மேற்கொள்ள ஸ்ரீரங்கம் மண்டலத் துணை வட்டாட்சியர் முத்துக்கமலம் தலைமையில் நில அளவை குழு வந்த நிலையில் துறைகுடி பஞ்சாயத்து பொதுமக்கள் சுமார் 100 கும் மேற்பட்டோர் நிலத்தை அளக்ககூடாது எனவும்,  புறம்போக்கு நிலத்தில் எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மணிகண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு,  ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன் தலைமையில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், தற்போது நிலத்தை அளந்து கொள்வதாகவும்,  இதற்குப் பிறகு இந்த இடம் தொடர்பாக பீஸ் கமிட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நில அளவை செய்ய வந்த அரசு அதிகாரிகளைக் ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.