குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறு தான் காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறு தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறு தான் காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறு தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 14 பேர் மரணமடைந்த நிலையில், மேகக்கூட்டங்கள் வந்ததால் தான் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் இயந்திர குறைபாடுகள் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவசர நிலை குறித்து விமானியிடம் இருந்து அருகில் உள்ள நிலையங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. விமானம் கட்டுப்பாட்டில் இருந்த போதே விபத்து நேரிட்டுள்ளதால், விபத்துக்கு காரணம் விமானியில் பிழையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.