சிறுமியின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு...உயிரிழந்த தாத்தாவின் உருவம் பதித்த கட்டவுட்டை கொண்டு வந்த பெற்றோர்..!

சிறுமியின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு...உயிரிழந்த தாத்தாவின் உருவம் பதித்த கட்டவுட்டை கொண்டு வந்த பெற்றோர்..!

25 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தாத்தாவின் உருவம் பதித்த கட்டவுட்டை சிறுமியின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அவரது பெற்றோர் கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் - ஜெயலட்சுமி தம்பதியரின் மகன் வினோத். இவரது மகள் கிருஷ்யாவின் மஞ்சள் நீராட்டு விழா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அப்போது சிறுமியின் பெற்றோர், கிருஷ்யாவின்  தாத்தா மறைந்த ஜெயராமனின் உருவம் பதித்த 5 அடி உயர கட்டவுட்டை வடிவமைத்து நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தனர்.  இச்சம்பவம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.