வரும் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு...

வரும் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

வரும் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு...

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் எனக் கூறினார்.

24ஆம் தேதி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் உரையாற்றுவார் எனக் கூறிய அவர், நாளை காலை சட்டப்பேரவை கூடியதும், 11 பேருக்கு இரங்கல் குறிப்புகளும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா மற்றும் டி.எம். காளியண்ணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத் தொடரில், கேள்வி பதில் நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை இல்லை எனத் தெரிவித்த அப்பாவு, ஒன்றிரண்டு சட்ட முன்வடிவுகள் வரலாம் எனவும் கூறினார்.